காற்று நுண்ணுயிர்கள்

சந்திரன் முதல் வகை நுண்ணுயிர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் நாம் நமது வாழ்வாதாரத்தை உருவாக்கிட வேண்டும் என்றால் அங்கு முதலில் இயற்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதாவது சந்திரனில் மண் – நீர் சுத்திகரிப்பு, மின் காந்த அலைகளினால் ஏற்படுகிற சீரமைப்பு, கோள் ஈர்ப்பு விசை, மைய அச்சின் சுழற்சி இயக்கம், பகல் – இரவு கால அளவுகள், ……. நுண்ணுயிர்கள் போன்ற வாழ்வாதார சீரமைப்புகளை உருவாக்கிட வேண்டும். அவ்வாறு சீரமைப்புகளை உருவாக்கினால் தான் சந்திரனில் பூமியின் நுண்ணுயிர்கள், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும்.

சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிட முதலில் மண் – நீர் சுத்திகரிப்பு முறைகளை உருவாக்கிட வேண்டும்.

மண் – நீர் சுத்திகரிப்பு உருவாக்கிடும் பொழுது (மிக நீண்ட காலமாக சூரிய வெப்பத்தாலும் – கடும் குளிராலும் பாதிக்கப்பட்ட மண்) சந்திரனில் இயற்கை சார்ந்த சூழ்நிலை உருவாகும். அதில் சூரிய வெப்பத்தால் உருவாகும் மின் காந்த அலைகளின் தாக்கம் குறையும். அதேசமயம் கடும் குளிரின் தாக்கமும் குறையும். எனவே சந்திரனில் வெப்பம் – குளிர் சீராகும்.

சந்திரனில் முதல் நுண்ணுயிர்கள்:
சந்திரனில் வெப்பமும், குளிரும் சீராகிற போது ஈரப்பதமுடைய காற்று வீசத்துவங்கும். இக்காற்றை சந்திரனில் முதல் தென்றல் காற்று என சரித்திரம் (சந்திரனில் வாழ்வாதார முதல் சரித்திரம்) பேசும்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு கோளிலும் வெப்பம் – குளிர் சீராகிறதோ அங்கு உருவாகும் காற்றில் ஈரப்பதம் வெளிப்பட ஆரம்பமாகும். ஈரப்பதம் நிறைந்த காற்றில் நுண்ணுயிர்கள் வெளிபடும். இது பிரபஞ்ச நியதியாகும். அதாவது பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் வாயிலாக உருவாகும் / வெளிப்படும் நுண்ணுயிர்கள் என்பது இயற்கை கட்டமைப்பில் நிகழும் இயற்கை கட்டமைப்பு முறையாகும் என்பதை அறிய வேண்டும்.

அறிய வேண்டிய இரகசியம்:
சந்திரனில் மாத்திரமல்ல எந்த ஒரு கோளிலும் வெப்பம் – குளிர் சீரமைக்கப்படுகிற போது ‘காற்று, வெப்பம், நீர், மண்’ என நான்கும் மிதமான சூழ்நிலையில் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம்.
இந்த சூழ்நிலையில்

  • காற்றில் தான் முதலில் நுண்ணுயிர்கள் வெளிபட வேண்டுமா?
  • ஏன் மண்ணில் நுண்ணுயிர்கள் வெளிப்படக்கூடாதா?
  • ஏன் நீரில் நுண்ணுயிர்கள் வெளிப்படக்கூடாதா?

என்றால் அதற்கு உரிய மற்றும் அவசியமான காரணம் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். இதை அவசியம் அறியவேண்டிய காரணம் யாதெனில் பிரபஞ்ச இயக்கத்தின் இயக்க அமைப்பு முறைகளை அறியும் சூழ்நிலை உருவாகிறது.

பிரபஞ்ச இயக்கம் இயங்குகிற நிகழ்வுகளை அறிய வாருங்கள்.

  • ஆகாயம் – அணைத்து கோள்களையும் தாங்கும் இருப்பிடமாகவும்
  • வெப்பம் – வெளிச்சம், இருள், உஷ்னம் உருவாகவும்
  • காற்று – சுழற்சி இயல் இயக்கமாகவும்
  • நீர் – குளிர்ச்சி இயல் மூல நிகழ்வாகவும்
  • மண் – ஒவ்வொரு கோளிலும் பஞ்ச பூதங்கள், இயற்கை கட்டமைப்பு, தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்திற்கு ஆதார அமைப்பாகவும் அமைந்திருக்கிறது. இதில் காற்றின் இயக்கமானது பிரபஞ்சம் சுழல்வதற்கு / இயங்குவதற்கு மூல முதல் காரணமாகவும், உயிரியல் இணைப்பில் உயிர் வரை நேரடி தொடர்பாகவும் இருப்பதாலும், பிரபஞ்சத்தில் நிகழும் அணைத்து மாற்றங்களுக்கு ஆதார மையமாகவும் அமைந்திருக்கிறது.

பிரபஞ்சம் முழுவதிலும் வாழும் உயிரிணங்களில் நுண்ணுயிர்களே எங்கும், எதிலும் வாழும் தன்மை உடையதாக அமைந்திருக்கிறது. எனவே காற்றில் வெளிப்படும் நுண்ணுயிர்களே முதல் வகையாக அமைகிறது.
முதல் வகை நுண்ணுயிர்களே ஆகாயம், காற்று, வெப்பம், நீர், மண் என காற்றின் துணையுடன் தமது உயிரியல் சங்கமத்தை பரவலாக்கம் செய்கிறது என்பதை அறிய வேண்டும்.

சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைக்கப்படுகிற போது தான் சந்திரனில் இயற்கையாக வெளிப்படும் உயிரியல் வாழ்வாதார கட்டமைப்புகள் உருவெடுக்கும் என்பதை அறிந்தால் இயற்கையின் இயல்பான இயக்கங்களை அறிய இயலும் என்பதையும் அறிய முடியும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of