வெப்ப நுண்ணுயிர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்கள் மற்றும் உயிரியல் கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. இயக்கத்திற்கு வெப்பம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவோம்.
வெப்பம் என்பது

வெப்பம் = வெப்பம் + வெளிச்சம் + இருள்

என இம்மூன்றின் கலவையாக வெப்பம் அமைந்திருக்கிறது.

வெப்பத்தின் இயக்கத்தை நாம் அறிய முற்பட்டால் ஒரு விசயம் நன்கு புலப்படும். என்னவெனில் இந்த பிரபஞ்சம் சுழல்வதற்கு காற்றின் சக்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோலவே காற்றோடு இணைந்து இயங்கும் வெப்பமும் அந்த அளவுக்கு முக்கியமாக அமைகிறது.
பிரபஞ்ச சுழற்சியில் பகல் – இரவு வெளிப்படுவதை தெரியபடுத்துவதே வெப்ப சக்தியின் சுழற்சி இயலே காரணமாக அமைகிறது.

  • பகல் – இரவு வெளிப்பட வெப்ப சக்தியின் சக்திமயமாக விளங்கும் வெளிச்சமும் – இருளுமே காரணமாக அமைகிறது.
  • பகல் – இரவு சுழற்சியே கால நேரத்தை தெரியபடுத்தும் காரண கருவியாக அமைகிறது.
  • கால நேரமே கோளின் சுழற்சி இயலின் சூழ்நிலையை தெரியபடுத்துகிறது.
  • கோளின் சுழற்சி இயலே கோளில் பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்கள் இணைந்து இயங்கும் தன்மைகளை வெளிபடுத்துகிறது.
  • பஞ்ச பூத கலவைகள் இணைந்து இயங்கும் தன்மைகளின் வெளிப்பாடே கோளில் வெப்பத்தின் தனித்தன்மையை வெளிபடுத்துகிறது.
  • கோளில் வெப்ப சக்தியின் தனித்துவம் வாய்ந்த தன்மை (கூடுதல் வெப்பம்) வெளிப்படுமே ஆனால் கோளின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் தன்மைகள் பாதிக்கப்படும்.
  • கோளின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் தன்மைகள் பாதிக்கப்படுமே ஆனால் அம்மண்ணின் மேற்பரப்பில் நுண்ணுயிர்கள் வாழ இயலாது.
  • மண்ணின் மேற்பரப்பில் நுண்ணுயிர்கள் வாழ இயலவில்லை என்றால் வேறு எந்த உயிரினங்களும் வாழ இயலாது.

நாம் வாழும் இந்த பிரபஞ்ச இயக்கத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்களையும், உயிரியல் தொடர்பு இயக்கங்களின் இயக்கங்களையும் நன்கு புரிந்து கொள்ள இயலும்.

பஞ்ச பூத கலவைகளின் இயக்கங்களின் தொடர்புகளில் நாம் மிகவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது வெப்பம் – காற்று – நீர் என இம்முக்கூட்டு கலவைகளின் தொடர்பையே ஆகும். இம்முக்கூட்டு கலவைகளே ஆகாயத்திலும், மண்ணிலும் தொடர்பு கொள்ளும் முறைகள் வாயிலாக கோளில் பஞ்ச பூத கலவைகளின் தொடர்பையும், உயிரியல் வாழ்வியல் தொடர்புகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
கோளில் வெப்பம் – காற்று – நீர் எனும் முக்கூட்டு கலவையில் வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக அமையுமேயானால் அங்கு இயற்கை கட்டமைப்பும் சீராக அமையாது. அது போலவே உயிரியல் (நுண்ணுயிர்கள்) வாழ்வாதாரமும் சீராக அமைவதற்கு உரிய வாய்புகளும் அமையாது.

மேலும் அறிவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of