செவ்வாய் கோளில் தரை இறங்க முடியுமா?! சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலுமா?! இயலும் வாருங்கள்.

அடிப்படை நிகழ்வு?

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான கோள் கட்டமைப்புகளும், நட்சத்திர கட்டமைப்புகளும் இயற்கை இயல் வாழ்வாதார கட்டமைப்புகளாக இயல்பாக அமைந்துள்ளது. மேலும் நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் ( தாவரங்கள் விலங்குகள், மனிதர்கள் ………….. உயிரினங்கள் உள்ளிட்ட உயிரியல் கட்டமைப்புகள்) பரந்து விரிந்து பசுமையுடன் கூடிய செழிப்பான நிலையில் மகிழ்வாக வாழ வேண்டும் என்பதற்காகவே பஞ்ச பூத சட்டமைப்புகளுடன் கூடிய இயற்கை கூட்டமைப்பாக இயற்கையில் பிரபஞ்சம் பரந்து விரிந்த நிலையில் அமைந்திருக்கிறது. மேலும் நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரியல் கட்டமைப்புகள் அனைத்தும் வாழ்வாங்கு வாழவே இயற்கையில் இயல்பறிவு எனும் மகத்தான வாழ்வியல் சக்தியும் இயற்கையில் வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மனிதர்கள் பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு கட்டமைப்பிலும் வாழவே உயிரியல் இயல்பறிவில் மனிதர்களுக்கு மாத்திரமே மகா மகத்துவம் வாய்ந்த அறிவாக பகுத்தறிவு வழங்கப்பட்டிருக்கிறது. மகா மகத்துவம் வாய்ந்த பகுத்தறிவின் துணைகொண்டு மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கொண்டே சந்திரனிலும், செவ்வாயிலும் தமது ஆய்வுகளை மேற்கொண்டும் மேலும் சூரிய குடும்பத்தை நோக்கி விசாலபடுத்தி வருகின்றனர். அவ்வாறு உள்ள தமது மகத்துவம் வாய்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்கிற நிலையில் இருக்கிறோம். சந்திரனில் நிலவும் அபரிமிதமான நிலையில் நிலவும் தட்ப – வெப்ப – குளிரை பொறுத்து கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் விஞ்ஞான கட்டமைப்பின் ஆய்வுகள் செவ்வாய் கிரகத்தில் தமது ஆய்வுகளை மேற்கொள்கிற நிகழ்வில் அங்கு நிலவும் இயற்கையில் சுழற்சி முறைகளை கடந்து செல்ல வேண்டிய அவசியம் உருவாகிறது. சந்திரனில் பகலில் பொறுத்து கொள்ள இயலாத நிலையில் வெப்பமும், இரவில் இயற்கை கண் கொண்டு காண இயலாது நிலையில் குளிரும், இருளுமாக அமைந்திருக்கிறது. அது போலவே நீரின் இருப்பிடமும் மறை பொருளாகவே அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சுவாச இயல் காற்றின் தன்மையும் இருப்பிடம் விளங்காத நிலையில் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் சந்திரனை கடந்து செவ்வாயில் தமது ஆய்வுகளை தரை இறங்கி ஆய்வுகளைமேற்கொள்ள விஞ்ஞானிகள் மேலும் மேலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாயில் தரை இறங்க செவ்வாய் கோளை சுற்றி நிலுவும் காற்றின் சுழற்சி இயக்கத்தையும் ஈர்ப்பு விசையின் தன்மையையும் சீரமைக்க வேண்டும். அவ்வாறு செவ்வாய் கோளின் சுற்றுப்புறத்தில் நிலவும் காற்றின் சுழற்சி இயக்கத்தை சீரமைப்பதற்கு முன்னாள் சந்திரனின் கோள் சுழற்சி இயக்க முறைகளை சீரமைக்க வேண்டும்.

சுழற்சி, ஈர்ப்புவிசை & காற்று

சந்திரனின் கோள் சுழற்சியல் இயக்கம் என்பது காற்றின் சுழற்சியியல் இயக்கத்தில் சுழலும் தன்மையை பொறுத்தே அமைகிறது. அதாவது கோள் தமது சுற்றுவட்ட பாதையில் சுழலுதல் என்பது கோள் சுற்றுவட்ட பாதையில் அமைந்திருக்கும் சுழல் ஈர்ப்பு விசையின் சக்தியால் (கோள் சுழற்சி ஈர்ப்பு விசை) நிகழ்கிறது. பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் பல்வேறு ஈர்ப்பு விசைகளில் கோள் சுழற்சி ஈர்ப்பு விசை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஈர்ப்பு விசையாகும். அதுபோலவே கோள் மைய அச்சு ஈர்ப்பு விசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. எனவே கோள் சுழல் ஈர்ப்பு விசையின் சுழற்சி இயக்கத்திற்கும், கோள் மைய அச்சின் சுழற்சி ஈர்ப்பு விசையின் சுழற்சி இயக்கத்திற்கும் பஞ்ச பூத இயற்கை கட்டமைப்பில் காற்றின் ஈர்ப்பு விசையும், நீரின் ஈர்ப்பு விசையும் பிரபஞ்ச சுழல் ஈர்ப்பு விசையின் இயக்கத்திற்கு காற்றின் சுழற்சி சுழல் ஈர்ப்பு விசையே பிரதான ஆதாரமாக அமைந்திருக்கிறது. இவை அனைத்திற்கும் ( உயிரியல் வாழ்வாதாரத்திற்கம், இயற்கை இயல் வாழ்வாதாரத்திற்கும்) காற்றின் ஈர்ப்பு விசையே காந்த ஈர்ப்பு விசையாகாவும், வெப்ப ஈர்ப்பு விசையாகவும், குளிர் ஈர்ப்பு விசையாகவும் சுழல் – சுழற்சி ஈர்ப்பு விசையாகவும் மாறிமாறி இயங்குவதற்கும் காரண, காரியமாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த சுழற்சி இயக்கத்தின் விசாலமான இயக்கங்களின் இயக்கங்களை கூர்ந்து கவனித்தால் அனைத்தும் எளிமையாகவும், தெளிவாகவும் தெரியவரும். அதாவது பிரபஞ்சத்தின் வெளி உள், உள் வெளி சுழற்சி இயக்கங்களின் இயக்கங்களுக்கு காற்றின் ஈர்ப்பு விசை சக்தியானது உயிரியல் இயக்கத்திற்கு காற்று எவ்வாறு உயிர் போல் அமைகிறதோ அதுபோலவே பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்து வகையான இயக்கங்களுக்கும் அமைகிறது என்பதை அறிய வேண்டும்.

காற்றின் சுழற்சி இயக்கத்தை சீரமைக்க முதலில் பஞ்ச பூத கட்டமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதாவது ஒரு கோளில் பஞ்ச பூத கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து இயங்குவதற்கு உரிய சூழ் நிலை அமைப்புகளை வாழ்வாதார சூழ்நிலை அமைப்புகளை வாழ்கிற நிலையில் உருவாக்கி வாழ்வதே இதற்கு உரிய எளிமையான அதேசமயம் வலிமையான தீர்வு முறையாகும்.

பூமியே மாதிரி கோள்

சூரிய குடும்பத்தில் வாழ்வாதார மாதிரி கோளாக ஏன் பூமியை குறிப்பிடுகிறோம். பூமியை பொறுத்தவரை நீர், மண், காற்று, வெப்பம் போன்றவை ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதை காண்கிறோம். இதனால் தான் பூமியில் காற்று, மேகம், மழை, வெப்பம் போன்றவை சமச்சீராக இயங்குகிறது என்பதை அறிவோம். இதே சூழ்நிலை அமைப்புகளை பூமியில் உள்ள உள் – வெளி காற்று சுழற்சி இயல் இயக்க முறைகளை சூரியனின் வெப்பத்தை தாங்கி கொள்ளும் சூழ்நிலை அமைப்புகளை கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பூமிக்கு அருகில் உள்ள சந்திரன், விண்கற்கள் …… செவ்வாய் ………. போன்ற கோள் கட்டமைப்புகளில் நிலவி சுழலும் சூழ்நிலை அமைப்புகளை பூமி பாதுகாப்பாகவும் சுழன்று இயங்க இயக்க உதவிகரமாக அமைகிறது.

இதற்கு அடிப்படை கட்டமைப்பு?

மேலும் பஞ்சபூத பரிமாற்ற சூழ்நிலை அமைப்புகளுக்கு பூமியில் நிலவும் பசுமை ஈர்ப்பு விசையே அவசிய காரணமாகும் என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும். ஆகாய கட்டமைப்பில் நிலவும் சூழ்நிலை அமைப்புகளில் வெளிப்படுவது ஒவ்வொன்றும் இயற்கையில் பரிமாறிக்கொள்கிறது. உதாரணமாக பூமியில் உள்ள நீரிலிருந்து ஆவியாகிற மேகமும் அதிலுள்ள குளிர்ச்சி தன்மையும் பூமிக்கு அருகில் உள்ள கோள்களான சந்திரன், செவ்வாய், வியாழன் ……….. போன்ற கோள்களின் சுழற்சி இயக்கங்களோடு இணைந்து இயங்குகிறது. இந்நிகழ்வை தெளிவாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பூமிக்கு அருகில் உள்ள சந்திரனின் வெளிவட்ட சுழற்சி காற்றமைப்போடு (சந்திரன் வெப்ப காற்று) பூமியில் இருந்து வெளிப்படும் ( பூமி – சமச்சீரான தட்ப வெட்ப காற்றானது இணைகிறது. இதனால் பூமியில் இருந்து வெளிப்படும் தட்ப வெப்ப காற்றில் உள்ள குளிர்ச்சி தன்மையை சந்திரனிலிருந்து வெளிப்படும் வெப்ப காற்றும் இணைகிறது. இதனால் பூமியில் இருந்து வெளிப்படும் குளிர்ச்சி தன்மையை சந்திரனிலிருந்து வெளிப்படும் வெப்ப சக்தியானது ஈர்த்து கொள்கிறது. இது போலவே சந்திரனிலிருந்து ( இரவில் குளிர் காற்று) வெளிப்படும் குளிர்ச்சி தன்மையை அதனருகில் உள்ள வெள்ளி கோளில் இருந்து வெளிப்படும் வெப்ப சக்தியானது ஈர்த்து கொள்கிறதுஇது தான் வெப்பமும் – குளிரும் ஆகாய இடைவெளிகளில் பரிமாறிக்கொள்கிற ஈர்ப்பு விசை பரிமாற்ற பராமரிப்பு முறையாகும்.

தீர்வு

இதையே பசுமை சுழற்சி ஈர்ப்பு விசை முறையாக பயன்படுத்தி கோள் சுழற்சி முறையாவும், காற்று சுழற்சி ஈர்ப்பு விசை முறையாகவும் உருவாக்கி கோளுக்கு கோள் ஆய்வு முறைகளில் உள்ள சுழற்சி ஈர்ப்பு விசையை சீரமைத்து உயிரியல் வாழ்வாதார முறைகளை உருவாக்கி மனித வாழ்வாதார மற்றும் உயிரியல் வாழ்வாதாரத்தை மேன்மைபடுத்தி சிறப்பான முறையில் பிரபஞ்சத்தில் வாழ்வாங்கு வாழ இயலும் என்பதை அறிவோம் வாருங்கள். கோள்களில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க முனையும் விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று கூடி மனித வாழ்வாதாரத்தை மேன்மை படுத்துவோம் வாருங்கள். ஒன்று கூடினால் உயர்வு நிச்சயம் என்பதை உணர்வோம் வாருங்கள். ஒன்று கூடி உயர்ந்து மகிழ்ந்து வாழ்வாங்கு வாழ்வோம். வாழ்ந்து மகிழ்ந்து வழிகாட்டி மகிழ்வோம் வாருங்கள். நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of