பூமி – பிரபஞ்சம் – வாழ்வியல்

அனைவருக்கும் வணக்கம்,

“அகில உலகத்திற்கும் பூமியே வாழ்வியலுக்கு மாதிரி வடிவம்”.
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் நமக்கு வாழ்வாதார இருப்பிடம் ஆகும்.

பிரபஞ்சமே நமது வாழ்வியலுக்கு தாய் போன்று விளங்குகிறது. ஏனெனில் நமது வாழ்வாதார கட்டமைப்பிற்கு தேவையான அணைத்தும் இந்த பிரபஞ்சத்தில் அமைந்திருக்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு சிறப்பு தன்மை உடையது. இந்த சிறப்புகளில் எல்லா சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒரு கோள் என்றால் அது “பூமி” ஆகும்.

பூமியில் உயிரியல் (தாவரங்கள், உயிரினங்கள்,மனிதர்கள்) வாழ்வாதாரத்திற்கு தேவையான அணைத்து இயற்கை கட்டமைப்புகளும் இயற்கையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது. அதாவது காடுகள் (தாவரங்கள்), மலைகள், நீர் ஆதார அமைப்புகள், உயிரினங்கள், மனிதர்கள்… எனும் கூட்டமைப்பை கொண்டு வாழ்வாதார கட்டமைப்புடன் கூடிய நிகழ்வுகள் வாழ்வியலாகவே அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச வாழ்வியல் விதிகள்:
பிரபஞ்ச வாழ்வியல் விதிகள் இரண்டு வகைப்படும்.
1. இயற்கையில் இயங்கும் இயக்க இயல்.
2. இயற்கையை இயக்கி இயங்கும் இயக்க இயல்
என இயற்கை (பிரபஞ்ச) வாழ்வியல் விதிகள் இரு வகை விதிகளை உள்ளடக்கி ‘சுழற்சி ஈர்ப்பு விசையில்’ இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இயற்கையில் இயங்கும் இயக்க இயல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கையில் இயங்கும் இயக்க இயல் விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் விதமாக பூமி அமைந்திருக்கிறது என்பதை பிரபஞ்ச வாழ்வியலை அறியவிரும்பும் ஒவ்வொரு மனிதருக்கும் புரியவரும்.
“பூமி இயற்கையில் இயங்கும் இயக்க இயலுக்கு” உரிய வாழ்வியல் முறையாகும். ஆக பூமியில் வாழும் வாழ்வியலுக்கு ‘மனித முதல் அறிவு அல்லது அறிவின் பருவம் ஒன்று’ என்று குறிப்பிடலாம்.

பூமியின் இயற்கை கட்டமைப்பில் மண், நீர், காற்று, வெப்பம் எனும் நான்கு அமைப்பில் முறையான ஆறு சுவைகளும் (இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு, கார்ப்பு), கலப்பின சுவைகளும் (ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் சுவைகள்: முறையானது, முறையற்றது) தாவரங்களிலும், உயிரினங்களிலும் இணைந்து இயங்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இயற்கையை இயக்கி இயங்கும் இயக்க இயல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர மற்ற அணைத்து கோள்கலுமே இயற்கையை இயக்கி இயங்கும் இயக்க இயல் – வாழ்வியல் முறைகளாகவே அமைந்திருக்கிறது.

ஆக பூமியை தவிர மற்ற கோள்களில் வாழ்வாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் இயற்கையை இயக்கி இயங்கும் இயக்க இயல் விதிகளை கடைபிடிக்க வேண்டும். ஆக பூமியைத்தவிர பிற கோள்களில் வாழும் வாழ்வியலுக்கு ‘மனித இரண்டாம் அறிவு அல்லது அறிவின் பருவம் இரண்டு என்று குறிப்பிடலாம்.’

மனித அறிவின் முதல் பருவத்திலேயே வாழ்வாதார சூட்சுமங்கள் சூட்சுமமாக புதைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

“அறிந்தால் வாழ்வு (தெளிவு),
வாழ்ந்தால் சிறப்பு (அனுபவம்)”.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of